மும்பை:
கொரோனா ஏற்படுத்திய வருவாய் பாதிப்பிலிருந்து மாநிலங்கள் மீண்டு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.மத்திய பாஜக அரசு, 2018-ஆம்ஆண்டில் ஜிஎஸ்டி-யை அமல் படுத்திய பின்னர் மாநிலங்களுக்கு நேரடி வரி வருவாய் வெகுவாகக் குறைந்து விட்டது. இப்போது மத்திய அரசின் கையை எதிர்பார்த்துத் தான் மாநிலங்கள் நிற்கின்றன.
ஜிஎஸ்டி வருவாய் இழப்பை 5 ஆண்டுகளுக்கு ஈடுகட்ட மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால், தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது.மாநிலங்களுக்கு நடப்பு நிதியாண்டில் சுமார் ரூ. 3 லட்சம் கோடிவருவாய் இழப்பு ஏற்படும் என, தரமதிப்பீட்டு நிறுவனங்கள் கணிப்பு வெளியிட்டிருந்தன. ஆனால், மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு 2.35 லட்சம் கோடிதான் என தெரிவித்த மத்திய அரசு, ஜிஎஸ்டி இழப்பும் 97 ஆயிரம் கோடிதான் என்று கூறியது.
இந்த இழப்பீட்டை மத்திய அரசு தரமுடியாது; மாநிலங்கள்தான் கடன்வாங்கி சமாளித்துக் கொள்ள வேண்டும்; என்று தெரிவித்தது. இதற்கு மாநிலங்கள் கடும் எதிர்ப்புத்தெரிவித்ததைத் தொடர்ந்து, மத்தியஅரசு தானே முன்னின்று நிதிச்சந்தையில் கடன் பெற்று, தமிழகம் உட்பட16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன்பிரதேசங்களுக்கு முதல் தவணையாக 6 ஆயிரம் கோடியை தற்போதுவழங்கி உள்ளது.
இந்நிலையில், மாநிலங்களின் நிதிநிலை தொடர்பாக ரிசர்வ் வங்கிஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுஉள்ளது. அதில், மாநிலங்களுக்கு கடும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட் டுள்ளதால் அவற்றின் மூலதனச் செலவுகள் வெகுவாக குறைந்து விடும் என்று தெரிவித்துள்ளது.மேலும், “மாநிலங்கள் கொரோனா பரவலுக்கு முன்பே பட்ஜெட் தாக் கல் செய்து விட்டன. அப்போது நிகரநிதிப்பற்றாக்குறை ஜிடிபி-யில் 2.4 சதவிகிதம். ஆனால், கொரோனா பரவலுக்கு பின்பு மாநிலங்கள் சமர்ப்பித்த பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை ஜிடிபி-யில் 4.6 சதவிகிதமாக இருக்கிறது. அதாவது, கொரோனா பரவல் மாநிலங்களின் கடந்த 3 ஆண்டு ஆதாயங்களை நாசம் செய்து விட்டது. இந்த பொருளாதார பாதிப்பில் இருந்து மீள பலஆண்டுகளாகும்” என்று தனது அறிக்கையில் ரிசர்வ் வங்கி குறிப்பிட் டுள்ளது.
வருவாய் சரிவு காரணமாக, சுமார் 1 லட்சத்து 26 ஆயிரம் கோடிஅளவிற்கான மூலதனச் செலவுகளை மாநிலங்கள் குறைத்திருப்பதாகவும், முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யில் இது 0.6 சதவிகிதம் குறைவு என்பதுடன், கடந்த 20 ஆண்டுகளில் இந்த அளவுக்கு மூலதன செலவுகளை மாநிலங்கள் குறைத்தது இதுவே முதல் முறை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.மிகப்பெரிய அளவிற்கு வருவாயைக் கொண்ட மாநிலங்களே, கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் மூலதன செலவை 35 சதவிகிதம் வரை குறைத்திருக்கின்றன. இது முந்தைய ஆண்டை விட 21 சதவிகிதம் குறைவுஎன்ற நிலையில், சம்பளம் உள் ளிட்ட செலவினங்கள் இந்தக் காலத்தில்12 சதவிகிதம் அதிகரித்துள்ளன என்பதையும் ரிசர்வ் வங்கி விளக்கியுள் ளது.